பிக் பாஸ் நிகழ்ச்சியில், இதுவரை பாசமலராக திகழ்ந்து வந்த ஜனனி மற்றும் அமுதவாணன் இருவரும் சண்டை போட்டதை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்துள்ளனர்.
பாசமலர் சண்டை:
பிக் பாஸ் நிகழ்ச்சியில், நடந்து முடிந்த கலை நிகழ்ச்சி டாஸ்க்கில் மணிகண்டன் மற்றும் விக்ரமனிடையே உச்சகட்ட பிரச்சனை ஏற்பட்டது. வீட்டில் இந்த வார போரிங் கண்டஸ்டன்ட் என்ற தண்டனை விக்ரமனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கடுப்பில் மணிகண்டன் உள்ளிட்ட போட்டியாளர்களிடம் அவர் வரிந்து கட்டிக் கொண்டு சண்டை போட்டுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இது ஒரு புறம் இருக்க, வீட்டுக்குள் இதுவரை பாசமலராக திகழ்ந்து வந்த அமுதவாணன் மற்றும் ஜனனி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதாவது தான், காமெடிக்காக செய்த ஒன்றை சீரியஸாக எடுத்துக்கொண்டு ஏன் என்னிடம் அப்படி பேசினாய் என அமுதவாணன் கேட்கிறார். ஆனால் ஜனனி, அசீம் பேசினால் தப்பு இல்ல, ஆனா நான் பேசினா தப்பா?
தளபதி விஜய்யின் வாரிசு பட 3வது சிங்கிள்! எப்போ ரிலீஸ் தெரியுமா? அதுவும் இவர் Voice லயா!!
அதுமட்டுமில்லை, எனக்கு தெரிஞ்ச வரை இந்த வீட்டுக்குள்ள போரிங் போட்டியாளர் ADK தான் என கோபத்தில் கத்தியுள்ளார். இதுவரை ஒற்றுமையாக இருந்து வந்த இருவரும், தற்போது சண்டை போட்றதால் இனி என்ன நடக்குமோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.