விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ஆரம்பத்தில் பாரதியும், கண்ணம்மாவும் ஒன்றுமையுடன் இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் ஆரம்ப கட்டத்தில் பாரதியும், கண்ணம்மாவும் எவ்வளவு அன்னியோன்னியமாக இருந்தார்கள் என்பது நாம் அனைவர்க்கும் தெரியும். இப்படி ஒரு காதல் ஜோடி இருக்குமா? என்று வியக்கும் அளவிற்கு வாழ்ந்து காட்டினர்.
வீட்டில் உள்ள அனைவரும் கண்ணம்மாவை ஒதுக்க ஆரம்பிக்க பாரதி தான் பக்க பலமாக இருந்தார். எந்த பிரச்சனை வந்தாலும் உன்னை கடைசி வரை காப்பேன் என்று சொல்லி தான் கண்ணம்மா கழுத்தில் தாலி கட்டினார் பாரதி.
ஆனாலும் கண்ணம்மாவிற்கு இதனால் வீட்டில் எதாவது பிரச்சனை ஏற்படுமோ என்ற பயமும் இருந்தது. சௌந்தர்யா கண்ணம்மாவை அறவே ஒதுக்கி தள்ளினார். இப்படி ஒரு அழகான ஜோடி தான் தற்போது இந்த அளவிற்கு பிரிந்து வாடுகின்றனர்.
இந்த வெண்பா செய்த காரியம் தான் சீரியலில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது ரசிகர்களை கண்கலங்க வைக்கும் வகையில் பாரதி கண்ணம்மாவின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.