வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அமெரிக்காவில், முதல் முறையாக வன விலங்கு பூங்காக்களில் வாழும் புலிகள், சிங்கங்கள் மற்றும் பனிச் சிறுத்தைகளில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு ஏன் வீடுகளில் வாழும் பூனைகள் மற்றும் நாய்களில் கூட கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.இது வனவிலங்குகளை பரவலாக கண்காணிப்பதற்கான தேவையை உருவாக்கியுள்ளது.
தற்போது இந்தியாவிலும் விலங்குகளிடம் இந்த கொரோனா தொற்று காணப்படுகிறது. வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு பெண்சிங்கம் உயிரிழந்துள்ளது.பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த பூங்காவில் உள்ள மற்ற சிங்கங்களை தனிமைப்படுத்தும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!