பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு பக்கம் ராதிகா வீட்டில் மயூவின் சடங்கு ஃபங்ஷன் சிறப்பாக நடக்கிறது. இன்னொரு பக்கம் ஈஸ்வரி, பாக்கியா எல்லோரும் சேர்ந்து இனியாவை கேரளாவிற்கு அழைத்து செல்கின்றனர். அடுத்ததாக ஜெனி அம்மா வீட்டுக்கு சென்றுள்ளதால் செழியன் நாளுக்கு நாள் மாலினி உடன் பேசுவது அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. மேலும் வீட்டுக்கு வராமல் மாலினியுடனே தங்கி விடுகிறார். இப்படி இருக்கையில் இந்த சீரியலில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதாவது செழியனின் நடவடிக்கையில் சந்தேகப்படும் பாக்கியா அவரை கண்டிப்பாராம். ஆனாலும் செழியன் வீட்டுக்கு வராமல் இருப்பது, குடிப்பது போன்ற செயல்களால் பாக்கியாவிற்கு சந்தேகம் வருமாம். இதனால் செழியன் உண்மையாவே ஆஃபீஸில் தான் இருக்கிறாரா ??இல்லை வேறு எங்கேயும் போகிறாரா?? என பாக்கியா கண்காணிப்பாராம். அப்போதுதான் செழியன் மாலினியுடன் பேசுவது, இரவு அங்கேயே தங்குவதும் பாக்கியாவுக்கு தெரிய வருமாம். இதுதான் அடுத்து வரும் எபிசோடில் அரங்கேறுமாம்.