இப்போதெல்லாம் கைகளில் பணப்புழக்கம் என்பது அரிதான விஷயமாக மாறிவிட்டது. அந்த வகையில், சாதாரண பொருள் வாங்குவது துவங்கி பல லட்சங்களில் பணப்பரிமாற்றம் செய்வது வரைக்கும் அனைத்தும் கையடக்க மொபைல் போன்களில் நடக்கிறது. இது போக, வங்கிகளால் வழங்கப்பட்ட டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ATM இயந்திரங்கள் மூலம் தேவைப்படும் போது பணத்தை எடுத்துக்கொள்ளும் சேவையையும் மக்கள் பெற்று வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்படி இருக்க, ATM இயந்திரங்களில் டெபிட் கார்டுகளை பயன்படுத்தாமல் UPI QR கோர்டு மூலம் பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக புதிய இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இது மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.