தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதால் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் அண்ணா பல்கலைக்கழகம், அண்மையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவுகளை தற்காலிகமாக நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த அறிவிப்பு கல்வியாளர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அறிவிப்பை வாபஸ் செய்ததாக அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் 100 சிறந்த பல்கலை. தரவரிசை பட்டியல் வெளிவந்துள்ளது.
பயில்வான் செத்தால் போதும்., பட்டாசு வெடித்து கொண்டாடுவேன்., கொந்தளித்த பிரபல நடிகை!!
இதில் 14வது இடத்தை அண்ணா பல்கலைக்கழகம் பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அண்ணா பல்கலை.யின் மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்தும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்