தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசு துறை ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கேரள மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மற்றும் ஆஷா (அங்கீகாரம் பெற்ற சமூக நல ஆர்வலர்) பணியாளர்களுக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிபவர்களுக்கு ரூ.1,000 எனவும், மற்ற பணியாளர்களுக்கு ரூ.500 எனவும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கேரள மாநிலத்தில் 87,977 பணியாளர்கள் பயன்பெறுவார்கள், இந்த சம்பள உயர்வு டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.