மாநிலத்தில் ஜன.18 முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்  – முதன்மை செயலாளர் அதிரடி அறிவிப்பு!!

0
தமிழகத்தில் புதிதாக பரவும் ஓமைக்ரான் பிஏ 4 வைரஸ் - மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்? பீதியில் மக்கள்!!
தமிழகத்தில் புதிதாக பரவும் ஓமைக்ரான் பிஏ 4 வைரஸ் - மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்? பீதியில் மக்கள்!!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், வருகிற ஜனவரி 18 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்:

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பரவல் மிகவும் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி புதிதாக 984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால், மாநிலத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலத்தில்  தினமும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள்  உள்ளிட்ட அனைத்தும் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, விழிப்புணர்வு கூட்டங்கள் மற்றும் சமூக நிகழ்வுகளுக்கு 200 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல, மறு உத்தரவு வரும் வரை, ஆன்லைன் வாயிலாக மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவலை, கருத்தில் கொண்டு ஜனவரி 18ஆம் தேதி முதல் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, ஜனவரி 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here