கொரோனவால் இறந்ததாக அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி..! ஆந்திராவில் பகிர் சம்பவம்!!!

0

ஆந்திரா விஜயவாடாவில் கொரோனாவால் உயிரிழந்ததாக அடக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் மக்கிடையே அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா வைரஸ் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கை சுழற்சியை மாற்றியுள்ள நிலையில், உலக நாடுகள் அனைத்தும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வருகிறது. உலகமெங்கிலும் இதுவரையிலும், 3 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். அதிலும் கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை புரட்டி போட்டுள்ளது.

இந்நிலையில் ஆந்திரா கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்த கிரிஜம்மா கொரோனா பாதிப்பு காரணமாக மே 12ஆம் தேதி விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 15ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனையில் இருந்து அவரது உடல் உறவினர்களிடையே ஒப்படைக்கப்பட்டது.கிரிஜம்மாவின் வீட்டில் நேற்று சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, அங்கு கிரிஜம்மா உயிருடன் வந்ததால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் நடந்த சம்பவம் குறித்து விசாரித்ததில் கிரிஜம்மா சிகிச்சையில் இருக்கும்போது மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த வேறு ஒருவரின் உடல், இவரது உறவினர்களிடையே வழங்கப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் அடக்கம் செய்யப்பட்டவர் யார் என விசாரணை நடைபெற்று வருகிறது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here