தனது காதலியை சந்திக்க சட்ட விரோதமாக நாட்டின் எல்லையை தாண்டிய காதலர் பாகிஸ்தானில் சிக்கிக்கொண்டார். 4 வருடங்களுக்கு பிறகு வீடு திரும்பிய அவர் காவல் துறைக்கு நன்றி கூறியுள்ளார்.
காதலிக்காக காதலனின் துணிச்சலான செயல் :
காதலன் காதலிக்காக எதையும் செய்வேன் எங்கும் வருவேன் என சினிமாக்களில் கூறுவது இயல்பு. ஆனால் நிஜத்தில் நடக்குமா என்று கேட்டால் சந்தேகம் தான். ஆனால் தன காதலியை சந்திக்க சட்டவிரோதமாக சுவிட்சர்லாந்து செல்ல முயன்றபோது பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் காதலன்.
அவரை பரிசோதித்து பார்த்ததில் சரியான ஆவணங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் காணாமல் போனார் என்ற புகாரை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இவர் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது தெரியவந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன் பின் தெலுங்கானா அரசு மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது 4 ஆண்டு கழித்து மீதும் வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய அவர் தெலுங்கானா அரசு மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்.