அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இப்பொழுதுதான் சீனாவை வெளிப்படையாக அமெரிக்கா எதிர்க்க தொடங்கி இருக்கிறது.அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு முழு காரணம் சீனாதான் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் குற்றம் சூட்டியுள்ளார்.திட்டமிட்டே கொரோனா வைரசை ஐரோப்பா, அமெரிக்காவிற்கு சீனா பரப்பியது என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ள ட்ரம்ப்,
சீனா மாணவர்களுக்கு அமெரிக்கா தடை
சீனாவின் வூஹான் நகரிலிருந்து கரோனா வைரஸ் உருவாகி இன்று உலகம் முழுவதும் பெரும் பொருளாதார மற்றும் உயிர் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் அமெரிக்காதான் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை அமெரிக்காவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 17 லட்சம் பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்க பல வருடங்களாக தொழில் நிறுவனங்களில் சீனா உளவு வேலைகளை செய்து வந்தது என கூறியுள்ளார்.சீனாவுக்கு எதிராக பல்வேறு வகையான வரிகளை விதிக்கப்போவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டி வருகிறார் சீனாவின் நலனுக்காக அமெரிக்காவின் முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவுசார் சொத்துகளை திருடிவதாக அவர்கள் மீது வெள்ளை மாளிகை குற்றம் சுமத்தியுள்ளது.
அமெரிக்க நலனுக்கு அச்சறுத்தல் ஏற்படும் என தெரிவித்துள்ளது. இதனால் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் நடக்கும் கிளர்ச்சியிலும் அமெரிக்கா தலையிட்டு கருத்து தெரிவித்து வருகிறது. இது சீனாவின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஆராய்ச்சி படிப்புகள், மற்றும் ஆராய்ச்சிகளில் சில சீன மாணவர்கள், ஈடுபட தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தடையை விதிப்பதாக அவர் கூறியுள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |