பெண்ணை பலாத்காரம் செய்த 2 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் – ராஜஸ்தானில் நடந்த வெறிச்செயல்!!!

0

இரண்டு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உணவு வாங்க பணம் கேட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்கள்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

பெண்ணை பலாத்காரம் செய்த 2 நபர்கள்:

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உணவு வாங்க பணம் கேட்டுக்கொண்டிருந்த ஒரு பெண்ணை; இரண்டு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்தப் பெண் மோதி டங்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் பெண்ணை வீதியின் நடுவே விட்டுச் சென்ற இரண்டு ஓட்டுநர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் திங்கள்கிழமை மாலை நடந்துள்ளது, மோதி டங்ரி நிலையத்தில் இருவருக்கும் எதிராக பெண் புகார் அளித்ததை அடுத்து; இருவரையும் போலீசார் விசாரித்தனர். டி.வி 9 அறிக்கையின்படி, அந்தப் பெண் தனக்கு உணவளிக்க பணம் கேட்டுக்கொண்டிருந்ததாகவும், காந்தி வட்டம் அருகே ஆம்புலன்சில் இருந்த இருவரையும் அணுகியதாகவும் கூறினார். அவர்கள் அந்த பெண்ணிற்க்கு உதவி செய்வது போல நடித்து ஆம்புலன்சில் அழைத்து; பலாத்காரம் செய்தனர் என்று கூறினார்.

அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தனியார் ஆம்புலன்ஸ்களைத் தேடினர், இருவரையும் கண்டுபிடித்த பின்னர் அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரித்தனர். பிறகு அந்தப் பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here