இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் வரும் மார்ச் மாதம் 22ம் முதல் மே மாத இறுதிவரை அரங்கேற உள்ளது. இத்தொடருக்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதன் மூலம், அனைத்து அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை போட்டி போட்டு கொண்டு ஏலத்தில் எடுத்து கொண்டனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயடு முக்கிய கருத்தை கூறியுள்ளார்.
அதில், 2025 IPL தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரோகித் சர்மா விளையாட வேண்டும் என நான் விரும்புகிறேன். ஒருவேளை தோனி ஓய்வை அறிவித்தால் சிஎஸ்கேவை ரோகித் வழிநடத்தலாம் என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார். கடந்த 2023 IPL தொடரின் இறுதிப் போட்டியுடன் சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு தனது ஒய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் வந்த சிக்கல்.., குழப்பமடைந்த மாணவர்கள்.., வெளிவந்த தகவல்!!!