ஆப்கானிஸ்தானில் வீடு வீடாக சென்று சோதனை நடத்தும் தாலிபான்கள் – அஞ்சி தவிக்கும் மக்கள்!!

0

ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து வீடு வீடாகச் சென்று தாலிபான்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

உலக நாடுகளின் ஒட்டு மொத்த கவனமும் தற்போது ஆப்கானிஸ்தான் மேலேயே உள்ளது. ஏனென்றால் பல வருட போருக்கு பிறகு தாலிபான்கள் அந்நாட்டின் தலைநகரை கைப்பற்றி உள்ளனர். தாலிபான்கள் காபூலை கைப்பற்றிய பிறகு, ஒட்டு மொத்த ஆப்கானிஸ்தானும் இவர்களின் கட்டுக்குள் வந்துள்ளது.

அங்கிருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளும் வெளியேறி உள்ளனர். ஆப்கானிஸ்தான் அதிபர் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தான் குடிமக்களும் தலிபான்களுக்கு பயந்து நடுங்கி நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறார்கள்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து ஒவ்வொரு வீடாக சென்று தாலிபான்கள் சோதனை செய்து வருகின்றனர். அந்த சோதனையின்போது தற்காப்புக்காக மக்கள் வீடுகளில் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here