பிக் பாஸ் சீசன் 4 எப்பொழுது என்று ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கும் நிலையில் அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பற்றிய தகவல் தினமும் வெளிவந்து கொண்டே தான் உள்ளது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகை ஒருவர் கலந்துகொள்ள 1 கோடி ரூபாய் கேட்டதாகவும், அதனால் வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 4
பிக்பாஸ் சீசன் 4 தொடங்கவுள்ள நிலையில் அதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளனர். இதற்கான 2 ப்ரோமோகளை விஜய் டிவி வெளியிட்டது. அதில் கடைசி ப்ரோமோவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் கூடிய பாடலுக்கு கமல்ஹாசன் நடமாடி இருப்பார். இதற்கு சாண்டி மாஸ்டர் தான் நடன இயக்குனராம்.
பிக்பாஸ் சீசன் 4 எப்பொழுது?? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் இருப்பது தான். ஆனால் அதற்கான அதிகாரபூர்வமான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் தினமும் இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் பெயர் கசிந்த வண்ணம் உள்ளன. பிக்பாஸ் எப்பொழுதும் விஜய் டிவியில் இருக்கும் இருவருக்கு வாய்ப்பளிக்கும். போன சீசன்களில் கவின், பாலாஜி போன்றவர்கள் கலந்துகொண்டனர். இந்த சீசனில் விஜய் டிவி பிரபலங்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இது ஒருபுறம் இருக்க ‘இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும்’ படத்தில் நடித்த நடிகையான ஷில்பா மஞ்சுநாத் இந்த சீசனில் கலந்துகொள்வதாக தகவல் வெளியாகின. இவர் அதற்கடுத்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. இவர் பிக்பாஸ் சீசனில் பங்கேற்க 1 கோடி ரூபாய் டீலிங் பேசி ஓகே செய்ததாக கூறப்பட்டது. ஆனால் 1 கோடி கொடுக்கும் அளவிற்கு இந்த நடிகை ஒர்த் இல்லை என நிராகரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.