தென்னிந்திய திரையில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் முக்கிய நடிகையாகவும் கலக்கி வருபவர் தான் ரவீனா ரவி. இவர் சாட்டை படத்தில் ஹீரோயினுக்கு டப்பிங் கொடுத்து தனது கெரியரை தொடங்கினார். இதை தொடர்ந்து எக்கச்சக்க திரைப்படங்களில் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றி வந்த இவர், ”ஒரு கிடாயின் கருணை மனு” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து லவ் டுடே, மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் இவர் வட்டார வழக்கு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். 80 களில் மதுரை மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் தான் நடித்தது குறித்து தனது அனுபவத்தை பற்றி ரவீனா பேட்டியாளர் சந்திப்பில் பகிர்ந்துள்ளார். அதாவது நல்ல படம் என நடிக்க கமிட் ஆனேன். ஆனால் இப்பட ஷூட்டிங் மதுரையில் நடந்த போது, அந்த பகுதி மக்கள் பேசும் பாஷையை புரிந்து கொள்ள மிகவும் கஷ்டப்பட்டாராம். அதன் பிறகு ஒரு கட்டத்தில் மதுரை பேச்சு எனக்கு பழகி விட்டது என கூறியுள்ளார்.