என் புருஷன்கூட என்ன சேர்த்து வச்சுருங்க.., கதறும் சீரியல் நடிகை தீபா.., நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு!!!

0
சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ், அன்பே சிவம், நாம் இருவர் நமக்கு இருவர், பிரியமான தோழி போன்று சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை தீபா. இப்படி சின்னத்திரையில் முக்கிய பிரபலமாக வலம் வரும் இவருக்கு முதல் திருமண வாழ்க்கை நினைத்தபடி கைகூடவில்லை. மேலும் முதல் திருமணமாகி இவருக்கு ஒரு மகன் இருந்த நிலையில் இவர் தயாரிப்பு மேலாளர் சாய் கணேஷ் பாபுவை காதலித்து வருவதாக சில தகவல்கள் வெளியானது.
ஆனால் சாய் கணேஷ் வீட்டில் தீபாவை திருமணம் செய்து கொள்ள கடும் எதிர்ப்பு இருந்ததால் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் சேர்ந்து வாழாமல் தனித்தனியாக இருக்கின்றனர். இந்நிலையில் நடிகை தீபா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கணேஷ் பாபுவை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அவரது குடும்பத்தினர் தன்னை சாதி ரீதியாக இழிவுபடுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தன் கணவருடன் தன்னை சேர்த்து வைக்கும் படி வழக்கு தொடர்ந்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here