தமிழ் சினிமாவில் தளபதி என்ற புகழுடன் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடித்த லியோ திரைப்படம் அண்மையில் வெளியாகி வசூலில் கல்லா கட்டியிருந்தது. தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ”கோட்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இவர் மற்றொரு பக்கம் அரசியல் கால் பதித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு நல திட்டங்களை செய்து வருகிறார்.
இப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களாக விஜய் மற்றும் அவரது மனைவி இருவரும் பிரிந்து விட்டதாக வதந்தி வலம் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இவர்கள் பிரிந்ததற்கான காரணம் குறித்து ஒரு மூத்த பத்திரிக்கையாளர் கூறியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது விஜய் அரசியலுக்கு வருவது அவரது மனைவி சங்கீதாவிற்கும் அவரது மகன் சஞ்சய்க்கும் பிடிக்கவில்லையாம். மேலும் இதுவரை சினிமாவில் சம்பாதித்த பணத்தை அரசியலில் செலவிட வேண்டாம் என சங்கீதா கூறியுள்ளார். ஆனால் அதை விஜய் கேட்கவில்லை. இப்படி இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் விஜய் – சங்கீதா பிரிய காரணமாம். மேலும் இது எந்த அளவிற்கு உண்மையான தெரியவில்லை.