பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை தனுஸ்ரீ தத்தா, ரஜினி பட வில்லன் நடிகர் நானா பட்டேகர் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
பரபரப்பு குற்றச்சாட்டு:
பாலிவுட் திரையுலகில், புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்து வந்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழில் விஷாலுடன் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்திருந்தார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு, பிரபல பாலிவுட் நடிகர் நானா பட்டேகரால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக, மீடூவில் புகார் அளித்தார். இதில், நடிகர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.
இந்த நிலையில் நடிகை தனுஸ்ரீ, மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது, நானா பட்டேகர் மற்றும் அவரது வழக்கறிஞர் உள்ளிட்ட மாபியா நண்பர்கள் தன்னை மிரட்டுவதாகவும், பழிவாங்கும் நடவடிக்கையுடன் தன்னை பின் தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
என் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால், அவர்கள் தான் பொறுப்பு என்றும், தயவு செய்து யாராவது ஏதாவது செய்யுங்கள் என பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். ரஜினியின் காலா உள்ளிட்ட படங்களில், வில்லன் பாத்திரத்தில் நடித்த நானா பட்டேகர் குறித்து 2வது முறையாக நடிகை குறிப்பிட்டுள்ள இந்த குற்றச்சாட்டு, பாலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்