இன்னும் சிம்பு 48 ஆரம்பிக்கல.., அதுக்குள்ள அடுத்த படமா? வெளியான சூப்பர் அப்டேட்!!

0
இன்னும் சிம்பு 48 படத்தையே ஆரம்பிக்கல.., அதுக்குள்ள அடுத்த படமா? வெளியான சூப்பர் அப்டேட்!!

தமிழ் சினிமாவில் ஆள் ரவுண்டராக இருந்து வருபவர் தான் நடிகர் சிம்பு. இவர் தற்போது உலக நாயகன் தயாரிப்பில் சிம்பு 48 படத்தில் நடித்து வருகிறார். துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி தான் சிம்பு 48 படத்தை இயக்க இருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த திரைப்படம் மிகப் பிரமாண்டமாக உருவாகி உள்ளதாகவும், இப்படம் சிம்புவின் திரையுலக பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமையும் என கூறப்படுகிறது.

உடல் மெலிந்து போன அரிசி கொம்பன் யானை., என்னதான் ஆச்சு? பரபரப்பு தகவல்!!!

இந்நிலையில் சிம்புவின் அடுத்த திரைப்படம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் சிம்புவின் 49 வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here