காமெடி நடிகை கோவை சரளா, இதுவரை திருமணமே செய்யாமல் வாழ்ந்து வருவதற்கான காரணம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
நடிகை கோவை சரளா:
தமிழ் சினிமாவில், தனது 15 வயதில் நடிக்க ஆரம்பித்த கோவை சரளா, தற்போது தனது 60 வயதிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இதுவரை 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், காமெடி நடிகையாக நடித்துள்ள இவர் இதுவரை திருமணமே செய்து கொள்ளவில்லை. இது குறித்த காரணத்தை, சமீபத்தில் அவரே ஒரு பேட்டியில் தெரிவித்தார். அதாவது, தனக்கு 4 தங்கைகள் மற்றும் ஒரு தம்பி உள்ளனர்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
அவர்களைப் படிக்க வைத்து, நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளேன். அது மட்டும் இல்லாமல் அவர்களின் பிள்ளைகளையும் தற்போது வரை தொடர்ந்து படிக்க வைத்து வருகிறேன். வாழ்க்கை முழுவதையும் அவர்களுக்காகவே வாழ்ந்து விட்டதால், இதுவரை திருமணம் செய்து கொள்ளவே இல்லை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவை கேட்ட ரசிகர்கள், எவ்வளவு நல்ல மனசு உங்களுக்கு என அவரை பாராட்டி வருகின்றனர்.