நடிகர் தனுஷ், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கிலிருந்து கோபத்துடன் வெளியேறியதாக தகவல் கிடைத்துள்ளது.
கோபத்தில் தனுஷ்:
நடிகர் தனுஷ் தன் திருச்சிற்றம்பலம் பட வெற்றிக்கு பிறகு, வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வரும் நிலையில், கோடை விடுமுறையான ஏப்ரல், மே காலங்களில் இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அப்போது போடப்பட்டிருந்த செட்-ஐ பார்த்து, என்ன பண்ணி வச்சிருக்கீங்க? இன்னும் பிரம்மாண்டமா இதுக்கு செட் அமைக்கணும் என கோபத்துடன் சொல்லிவிட்டு, ஷூட்டிங்கில் இருந்து பாதியிலே வெளியேறியதாக தகவல் கிடைத்துள்ளது. தனுஷின் இந்த முடிவால் பட குழு அதிர்ந்து போனதாகவும், விரைவில் தனுஷ் சொன்னப்படியே செட்-ஐ மாற்றி அமைக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.