தமிழ் திரையுலகின் இளம் நடிகையான பவுலினா என்கிற தீபா தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில், பிரபல இயக்குனர் ஒருவரின் தலையீடு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
பகீர் பின்னணி :
வாய்தா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பவுலினா என்கிற தீபா. இவர் தெறி, ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். முன்னணி பிரபலமான இவர், கடந்த 2 நாட்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய, இறுதி கடிதத்தில் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸ் விசாரணை துவக்கினர். தீபாவின் அண்ணன்,அவர் பயன்படுத்திய ஐ-போன் மாயமானதாக அண்மையில் புகார் அளித்தார். இந்த நிலையில், தீபாவுக்கு பிரபல இயக்குனர் ஒருவரின் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், அவர் ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகளுக்குத் தந்தையாக இருப்பவர் என்றும் சொல்லப்படுகிறது. சினிமா ஆசை காட்டி, அந்த இயக்குனர் நடிகையை சீரழித்து விட்டதாகவும், திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி ஏமாற்றி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் மனமுடைந்த தீபா சம்பவம் நடந்த நாளன்று , அந்த இயக்குனருக்கு போன் செய்து சண்டை போட்டுவிட்டு இந்த விபரீத முடிவை எடுத்து இருக்கலாம் என பேசப்படுகிறது. இதையடுத்து அந்த இயக்குனரையும் போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். நடிகையின் ஐபோன் கிடைத்தால் தான், இந்த மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என போலீஸ் தரப்பில் இருந்து சொல்லப்பட்டுள்ளது.