திரையுலக பிரபலங்களில் பலர் தாங்கள் தடுப்பூசி போட்டு கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மக்களை தடுப்பூசி போட ஊக்குவித்து வருகின்றனர். தற்போது நடிகர் அசோக் செல்வன் தான் தடுப்பூசி போட்ட புகைப்படத்தை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது அதிகமான பிரபலங்கள் முன்வந்து தடுப்பூசி போடுவதை நாம் காண்கிறோம். தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வையும் அவர்கள் உருவாக்கி வருகின்றனர். அவர்கள் வரிசையில் அசோக் செல்வன் இணைந்துள்ளார். கோலிவுட் பிரபலங்களில், தடுப்பூசி போட்ட சமீபத்திய நடிகர் அசோக் செல்வன்.
நடிகர் அசோக் செல்வன் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான தீனி என்ற படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் வெளியாகியது. தான் தடுப்பூசி போட்டுக் கொண்ட போட்டோவை பகிர்ந்துக் கொண்ட அசோக் செல்வன், தடுப்பூசி குறித்த சந்தேகங்களும், தயக்கங்களும் தனக்கும் இருந்ததாகவும் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு அதன்படி தான் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தடுப்பூசி போட்ட புகைப்படத்தை பகிர்ந்து இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று நோயை ஒழிக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு சரியான பாதையில் பயணித்து வருகிறோம் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!