தென்னிந்திய சினிமாக்களில் மலையாள திரைப்படம் ஒரு தனி ரகம் தான். அதிகமான ஆக்ஷன், ஃபேண்டஸி எதுவும் இல்லாமல் மக்களின் அன்றாட வாழ்வியலோடு ஒத்திருக்கும் மலையாள சினிமாக் கதைகள் மொழிகளைத் தாண்டியும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் தான் “ஆடு ஜீவிதம்” என்ற திரைப்படமும் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த மார்ச் 28ம் தேதி வெளியாகிய நிலையில் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மலேசியா மாமாவை ரகசியமாய் சந்திக்கும் ரோகினி.., வீடியோ ஆதாரத்துடன் நிரூபிக்கும் முத்து!!!
இந்நிலையில் இப்படத்தின் வசூல் விவரம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆடு ஜீவிதம் திரைப்படம் வெளியாகி 7 நாட்கள் கடந்த நிலையில், உலக அளவில் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.