நாட்டில் நடக்கும் பல்வேறு மோசடிகளை தடுக்க மத்திய அரசு பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்க வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக ஒரு சிலர் ஒரே பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதை தடுக்கவே ஆதாருடன் ரேஷன் கார்டை உடனடியாக இணைக்க வேண்டும் என அந்தந்த மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் இது போன்ற இணைப்புகளை மேற்கொள்வதற்கு ஆதாரில் அனைத்து தகவல்களும் சரியான முறையில் இருக்க வேண்டும். இதனால் ஆதார் கார்டை அப்டேட் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அந்த வகையில் ஆதாரில் உள்ள பிழைகளை திருத்தம் செய்ய ஜூலை 11 ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் அதை மேலும் நீடித்து செப்டம்பர் 30ம் தேதி வரை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தனர். ஆனால் தற்போது இதற்கான காலக்கெடுவும் நெருங்கி விட்டதால் இன்னும் நாட்டில் ஏராளமானோர் ஆதார் கார்டை புதுப்பிக்காமல் உள்ளனர். இதனால் இவர்களின் நலன் கருதி டிசம்பர் 14ஆம் தேதி வரை ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தமிழக மகளிருக்கு ரூ.1,000 உரிமை தொகை.., வெளிவந்த முக்கிய தகவல்!!