இந்த நவீன காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் அசைவ உணவுகளை சாப்பிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் அசைவ உணவால் பிரேசில் நாட்டில் ஓர் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதாவது நண்பர் ஒருவர் பரிசாக அளித்த பபர் வகை மீனை சமைத்து சாப்பிட்ட மேக்னோ கோம்ஸ் என்ற நபர் உயிரிழந்துள்ளார். சையனைடை விட 1,200 மடங்கு விஷம் கொண்ட இந்த மீன் உண்பதற்கு தகுதியற்றது என கூறப்படுகிறது. இந்த விஷம் தாக்கினால் 24 மணி நேரத்துக்குள் மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனாலும் ஜப்பானில் இந்த மீன் பிரபல உணவாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.