இப்போது தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ள லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. முதன் முதலில் தமிழில் அவர் நடித்த படம் ஐயா என்பது ஊரறிந்த உண்மையே. ஆனால் இந்த படத்தில் அவருக்கு முன்னால், மலையாள நடிகையான நவ்யா நாயரிடம் கேட்டு அவர் ஒப்புக் கொள்ளாததால் அந்த சான்ஸ் நயன்தாராவுக்கு கிடைத்தது என்ற தகவல் சமீபத்தில் தெரியவந்து உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
குடும்ப பாங்கு மற்றும் குடும்ப சென்டிமென்ட்களை மையாக கொண்டு படம் இயக்குவதையே தனது பாணியாக கொண்டவர் இயக்குனர் ஹரி. சரத்குமார் நடிப்பில் ஹரி இயக்கி படம் தான் ஐயா. இந்த படம் வெளியான காலகட்டத்தில் இந்த படம் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது அதிலும் “ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் ” பாடல் இன்று வரை அனைவராலும் முணுமுணுக்க படுகிறது.மேலும் இப்படத்தில் நெப்போலியன், வடிவேலு மற்றும் பிரகாஷ்ராஜ் என்ற பெரிய நட்சத்திர பட்டாளங்களே அதில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் ஹரி இந்த படத்தில் நயன்தாராவுக்கு முன்பே மலையாள நடிகையான நவ்யா நாயரை அணுகியுள்ளார்.நவ்யா நாயர் அப்போது வேறு ஒரு மலையாள படத்தில் பிஸியாக இருந்ததால் அந்த வாய்ப்பை ஏற்கவில்லையாம்.மேலும் தமிழில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் அவற்றில் ஏதோ சில காரணங்களால் நடிக்க முடியாமல் போய்விட்டது என்றும் பிரபல ஊடகம் ஒன்றில் நேர்காணலில் வெளிப்படையாக கூறியுள்ளார்.ஆனால் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்து தனக்கென்று ரசிகர்களை சேர்த்து வைத்து உள்ளார் நவ்யா நாயர்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!