கொரோனா தொற்று பரவலின் காரணமாக தமிழக அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது. இந்நிலையில் சந்தைகளில் காய்கறி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது காய்கறி விலை கடுமையாக குறைந்த்துள்ளது. இதனால் மக்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர்.
குறைந்தது காய்கறி விலை :
கொரோனா தாக்கம் நாடு முழுவதும் அதிகமாக காணப்படுவதாலும் நோய் தொற்றுபாதிப்பு அதிகரிப்பதாலும் தமிழகம் மட்டும் அல்லாது பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொது மக்கள் யாரும் வெளியில் செல்ல அனுமதி இல்லை. தற்போது வாகனங்கள் மூலமாக பொதுமக்களுக்கு காய்கறிகள் விநியோகிக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 4000க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் காய்கறிகள் விநியோகம் செய்யப்படுகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி விலை 10 ரூபாயாகவே உள்ளது. நேற்றும் இதே விலையில்தான் விற்பனையானது. வெங்காயம் விலை நேற்று 18 ரூபாயிலிருந்து இன்று 12 ரூபாயாகக் குறைந்துள்ளது. அவரைக்காய் விலை 25 ரூபாயாகவும், பீன்ஸ் 60 ரூபாயாகவும், முருங்கைக்காய் 20 ரூபாயாகவும் உள்ளது. தற்போது காய்கறி விலை சரிவில் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.