கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணை தலைவர்கள், பொதுச்செயலர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகிய நிலையில், மேலும் ஒரு பொதுச்செயலரான சந்தோஷ்பாபு ஐஏஎஸ் விலகியுள்ளார்.
கமல் கட்சியிலிருந்து விலகும் அதிகாரிகள்:
கமல் அவர்களின் மக்கள் நீதி மையம் கட்சி நடந்து முடிந்த தேர்தலில் போட்டியிட்டு தி.மு.க. மற்றும் ஆ.தி.மு.க விடம் தோல்வியுற்று ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தோல்வியை தொடர்ந்து கட்சியில் பலரும் விலகி வந்த நிலையில் தற்போது பொதுச்செயலரான சந்தோஷ்பாபு ஐஏஎஸ் இன்று விலகியுள்ளார்.
மக்கள் மையத்தின் தோல்வியை தொடர்ந்து ம.நீ.ம., கட்சியின் துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச் செயலர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், திடீரென கட்சியில் இருந்து கூண்டோடு விலகினர். இன்று கட்சியிலிருந்து விலகிய பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு இது எனது தனிப்பட்ட காரணங்களால் எடுக்கப்பட்ட முடிவு என கூறியுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
‛மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன். இது எனது தனிப்பட்ட காரணங்களால் எடுக்கப்பட்ட முடிவு. கமல்ஹாசன் மற்றும் கட்சியினர் எனக்கு அளித்த பாசத்திற்கும், நட்பிற்கும் நன்றி,’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.