கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடக பெரிதும் பாதித்துள்ளது. இதனால் பைசர் மற்றும் மாடர்னா நிறுவன தடுப்பூசிகளை வாங்க கர்நாடக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
தடுப்பூசிகள் வாங்க கர்நாடக ஆலோசனை:
நாடு முழுதும் பரவி மக்களை அன்றாட வாழ்க்கையினை பாதித்து உலகை நடுங்க வைத்த கொரோனாவானது முதல் அலையை தொடர்ந்து தற்போது தீவிரமாக இரண்டாம் அலையில் பரவிக்கொண்டுள்ளது. இதனால் நாடு முழுதும் பெரும் பாதிப்பை அடைந்து வருகிறது. இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவை தொடர்ந்து கர்நாடகாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் பைசர் மற்றும் மாடர்னா நிறுவன தடுப்பூசிகளை வாங்க கர்நாடக அரசு ஆலோசனை நடத்துகிறது.தடுப்பூசி பற்றாக்குறை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், சர்வதேச டெண்டர் மூலம் தடுப்பூசி வாங்க கர்நாடகா முடிவு செய்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பைசர் மற்றும் மாடர்னா நிறுவன தடுப்பூசிகளை வாங்க முடிவு செய்தால் தடுப்பூசி பற்றாக்குறை தீர்ந்துவிடும் என்றும் மேலும் மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் கொரோனா தொற்றின் தாக்கத்தையும் குறைத்துவிடலாம்.