தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கு இலவச சிகிச்சை – யார் யார் பயன் பெறலாம் | அரசாணை வெளியீடு !!!
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கு இலவச சிகிச்சை தொடர்பான அரசாணையை வெளியிட்டார். முதல் நாள் கோப்புகளில் கையெழுத்திட்ட நிலையில் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
தற்போது அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கொரோனவிற்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளிலும் இனி இலவச சிகிச்சை பெறலாம் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் உள்ள அனைவரும் இதில் பயன் பெறுவார். எனவே இனி தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவிற்கு இலவச சிகிச்சை பெறலாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.