கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “இதயத்தை திருடாதே” சீரியல் ப்ரோமோ தற்போது வேற லெவலில் வெளியாகி உள்ளது. பல சுவாரஸ்யங்களுடன் வரும் வாரத்தில் அந்த சீரியல் இருக்க போகிறது என்றும் அந்த ப்ரோமோவில் நன்றாக தெரிகிறது.
“இதயத்தை திருடாதே” சீரியல்
தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “இதயத்தை திருடாதே” இந்த சீரியலில் தற்போது முக்கியமாக பல ட்விஸ்டுகள் இருந்து வருகின்றது. இந்த சீரியலில் தற்போது தான் சிவா மற்றும் சஹானா இருவருக்குமான காதல் அதிகமாகி வருகின்றது. அதே போல் சிவா பழைய நிலைக்கு திரும்பி உள்ளார். இப்படியான நிலையில் இன்று இரு ப்ரோமோக்கள் வெளியாகி உள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி?? மதுரை உயர்நீதிமன்ற கிளை!!
முதல் ப்ரோமோவில், சஹானாவிற்கு ஒரு கொரியர் வருகிறது. அதனை அவரது முன்னாள் காதலன் பார்த்தசாரதி அனுப்பி இருக்கிறார். பார்த்தசாரதி இறந்து விட்டதாக தொடர்ந்து காட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது இப்படி ஒரு ட்விஸ்டினை வைத்துள்ளனர். அதே போல் அவர் சஹானாவை ஒரு கோவிலுக்கு வர சொல்லுகிறார். அங்கே சஹானாவும் செல்கிறார். மிக முக்கியமான ட்விஸ்ட்டாக இந்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதே போல், அடுத்த ப்ரோமோ ஐஸ்வர்யா திருமணத்திற்காக வெளியாகி உள்ளது. திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் “சில்லுனு ஒரு காதல்” சீரியல் கதாநாயகன் சூர்யா மற்றும் கதாநாயகி கயல் இருவரும் பங்கு பெற உள்ளனர். அதே போல் ஸ்பெஷல் எபிஸோடாக வரும் திங்கள் கிழமை மாலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை “இதயத்தை திருடாதே” ஒளிபரப்பாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.