தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு??தலைமை செயலகத்தில் தீவிர ஆலோசனை!!

0

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலை குறைப்பதற்காக தலைமை செயலகத்தில் ராஜிவ் ரஞ்சன் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இரவு நேர ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக அதிகமான அளவில் காணப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 10ம் தேதி தமிழகத்தில் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமலுக்கு வந்தது. அதில் திரையரங்குகளில் 50% இருக்கைகள், ஹோட்டலில் நேர கட்டுப்பாடு, கோவில் போன்ற மதசார்ந்த திருவிழாவிற்கு தடை போன்ற பல கட்டுப்பாடுகள் தற்போது தமிழகத்தில் அமலில் இருந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதேபோல் தமிழகத்தில் மக்கள் அனைவரையும் மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற பல பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மக்களை தொடர்ந்து அதிகாரிகள் அறிவுறுத்தியும் வருகின்றனர். மேலும் இதனை மீறுபவர்களிடம் அபராதத்தையும் விதித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி – மக்கள் அதிர்ச்சி!!

இந்நிலையில் இதனை தடுப்பது குறித்து தற்போது தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், ஜிம், பார்க் போன்றவற்றை முழுமையாக மூட முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here