கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “இதயத்தை திருடாதே” சீரியலில் எலியும் பூனையுமாக முட்டி கொண்ட ஷிவா மற்றும் சஹானா ஜோடி தற்போது காதல் ஜோடியாக உருவெடுத்துள்ளனர்.
இதயத்தை திருடாதே சீரியல்
காதல் காட்சிகள் முதலில் வெள்ளித்திரையில் மட்டுமே இருந்து வந்தது. ஆனால், சமீப காலமாக ஒளிபரப்பப்படும் அனைத்து சீரியல்களிலும் காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெறுகின்றன. இயல்பான காதல் காட்சிகளை ரசிகர்கள் விரும்புவதால் தொலைக்காட்சி நிறுவனங்கள் அது போன்ற ரொமான்ஸ் உள்ள காட்சிகளை ஒளிபரப்புகின்றன. அதில் தற்போது அனைவருக்கும் மிகவும் பிடித்த சீரியல் என்றால் அது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “இதயத்தை திருடாதே” சீரியல் தான்.
#INDvsENG 2வது ஒருநாள் போட்டி – டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இங்கிலாந்து!!
இந்த சீரியலின் ஆரம்பத்தில் நாயகன் ஷிவா மற்றும் நாயகி சஹானா இருவரும் பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டனர். பின்பு, இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதில் சிவாவிற்கு சஹானா மீது காதல் வந்து விடுகிறது. ஆனால், சஹானா சிவாவை நல்ல தோழனாக மட்டுமே தற்போது வரை பார்த்து வருகிறார். இதனை அடுத்து நேற்றைய எபிசோடில் ஷிவா மீராவுடன் டான்ஸ் ஆட கூச்சப்படுகிறார். ஆனால், சஹானா ஷிவாவை உற்சாகப்படுத்தி அவரை டான்ஸ் ஆட வைக்கிறார். இதனால் சிவாவும் மீராவுடன் சேர்ந்து நன்றாக நடனம் ஆடுகிறார்.
ஷிவா தனக்கு மீராவுடன் ஒத்துப்போகவில்லை என்று கூறும்போது சஹானா அவருக்கு உதவுகிறேன் என்று கூறுகிறார். அதனை பயன்படுத்தி ஷிவா சஹானாவுடன் நெருக்கமாக ஆடுகிறார். இருவருக்குமான காதல் காட்சிகள் ஆரம்பித்து விட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவாவின் நிலை இப்படியாக இருக்க சஹானாவிற்கு ஷிவா நன்றாக நடனம் ஆடுவது பிடித்திருந்தாலும் அவர் மீராவுடன் நெருக்கமாக இருப்பது சஹானாவிற்கு உறுத்துகிறது.
காதலின் முதல் படிநிலை பொறாமை தானே. அது தான் சஹானாவிற்கு வந்துள்ளது. சிவா மீராவை பற்றி சஹானாவிடம் பெருமையாக பேசும்போது சஹானாவிற்கு கோபம் வந்து விடுகிறது. இதனால் ஷிவாவிடமும் கோபமாக பேசுகிறார். பின், இருவரும் டான்ஸ் கிளாஸ் செல்கின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அங்கு மீரா பயிற்சி முடிந்ததும் மீரா சிவாவிடம் தன்னை வீட்டில் கொண்டு போய் விட முடியுமா என்று கேட்கிறார். இது சஹானாவை மிகவும் அதிகமாக பொறாமை கொள்ள வைக்கின்றது. இதனை அடுத்து இருவருக்குமான காதல் காட்சிகள் இனி அதிகரிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.