இந்தியாவின் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய சொந்த கதையில் ’99 சாங்ஸ்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் சில சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேறியிருக்கிறது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்
இந்திய சினிமா துறையின் பிண்ணனி இசையில் ஒரு முக்கிய புள்ளியாக இருப்பவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்த ‘ஸ்லம் டாக் மில்லினர்’ என்ற திரைப்படத்துக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்ற ஒரே இந்தியர். இந்த ஒரே படத்தின் மூலமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உலக சினிமாவில் யாரும் நினைத்திராத ஒரு இடத்திற்கு சென்றார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதுவரை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான திரைப்படங்கள் பல விருது மேடைகளை கண்டிருக்கிறது. இவரது இசையில் மயங்காதவர்கள் என்று ஒருவரும் இல்லை. அந்த அளவுக்கு இசையில் ஒரு புதிய பரிணாமத்தை வகுத்திருப்பவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தற்போது தன்னுடைய சொந்த கதையில், சொந்த தயாரிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
ஏன்பா.., முல்லை நீ பண்ற காரியமா இதெல்லாம்?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!
இசையை மையமாக வைத்து உருவாகியுள்ள ’99 சாங்ஸ்’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், யுவன் சங்கர் ராஜா, அனிருத், நடிகர் சிவகார்த்திக்கேயன், இயக்குனர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர்.
இந்த விழா மேடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் ஹிந்தி மொழியில் பேச, ‘ஹிந்தி’ என கூறிவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். அதிர்ச்சியடைந்த தொகுப்பாளினி மீண்டுமாக தமிழில் பேச ஆரம்பித்ததும் திரும்பவும் மேடை எறியுள்ளார் ரஹ்மான். ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த செயல் தற்போது ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன் ஒரு பாடலை பாடி இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.