கடந்த வாரம் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் சிவாங்கி அஸ்வின் வெளியேறவில்லை என்றதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அது மட்டும் அல்லாமல் அவரது முகபாவனையே அதனை தெளிவாக காட்டியது என்று கூட சொல்லலாம்.
“குக் வித் கோமாளி” நிகழ்ச்சி
விஜய் தொலைக்காட்சியில் தற்போது மிகவும் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சி தான், “குக் வித் கோமாளி” இந்த நிகழ்ச்சியில் நன்றாக சமைக்க தெரிந்த ஒருவரும்(குக்), ஓரளவிற்கு சமைக்க தெரிந்த ஒருவரும்(கோமாளி) கூட்டாக இருப்பார். இந்த நிகழ்ச்சியின் சிறப்பே கோமாளிகள் செய்யும் அலும்பல் தான்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மிகவும் நகைச்சுவையாக இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு “குக் வித் கோமாளிகள் 2” அதே கோமாளிகளுடன் களம் இறங்கியது. இந்த சீசனில் மணிமேகலை, சிவாங்கி, புகழ், பாலா என்று கோமாளிகளின் சேட்டைகள் பயங்கரமாக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் குக்காக வரும் அஸ்வின் மற்றும் கோமாளியாக இருக்கும் சிவாங்கிக்கு மிகவும் பிடிக்கும்.
இது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. அஸ்வின் மற்ற பெண்களுடன் பேசினால் அது சிவாங்கிக்கு பிடிக்காது. அதே போல் அவருடன் கூட்டணி அமைத்து சமையல் செய்ய தான் சிவாங்கி விரும்புவார். இப்படியாக இருக்க, இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தினை எட்டி உள்ளது. இந்த வாரம் அஸ்வின் மற்றும் பவித்ரா இருவரில் ஒருவர் போட்டியினை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
இதனால் சிவாங்கி மிகவும் சோகமாக இருந்தார். நடுவர்கள் முடிவினை கூறும் வரை சிவாங்கி தலையை நிமிர்த்தவே இல்லை. அஸ்வின் போட்டியினை விட்டு வெளியேறவில்லை என்பதனை அறிந்ததும் சிவாங்கி மிகவும் உற்சாகம் அடைந்தார். அதே போல் அவரது கைகளை பிடித்து தனது சந்தோசத்தினையும் வெளிப்படுத்தினார்.