தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

0

தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது வானிலை நிலவரம் குறித்த தகவலை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வானிலை நிலவரம்:

தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் வருகிற 19.03.2021 ஆகிய தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மேலும் வருகிற 20.03.2021 அன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய கூடும். தமிழகத்தில் மீதமுள்ள மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மேலும் தமிழகத்தில் உள்ள உள் மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு இயல்பான நிலையை விட அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் உயர்ந்து காணப்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் கொரோனா தலையெடுக்க காரணம் பள்ளி திறப்பா?? பிரச்சாரமா?? – ஆலோசனையில் தலைமை செயலாளர்!!

சென்னை பகுதியை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். மேலும் அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியசும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எந்த பகுதியிலும் மழை பதிவாகவில்லை. மேலும் கடலுக்குள் செல்வதற்கு மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here