பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது புகார் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து சிபிசிஐடி அதிகாரிகள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை
முதலமைச்சர் பழனிச்சாமி கடந்த 21ம் தேதி திருச்சி மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்து பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவம் குறித்து விசாரிக்க டிஜிபி திரிபாதி சிபிசிஐடி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு கூடுதல் தலைமை செயலர் ஜெயஸ்ரீரகுநந்தன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பெண் ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண்ணை மானபங்கப்படுத்துதல், பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட்ட நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னதாக புகார் அளிக்க வந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை தடுத்து நிறுத்தியதாக, செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு உட்பட்ட இருவரையும் நேரில் அழைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.