பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். சினிமாவில் எப்படியாவது ஒரு நிலையான இடத்தை பிடித்து விட வேண்டும் என போராடும் யாஷிகா தனது வலைதள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
யாஷிகா ஆனந்த்
மாடலிங் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் யாஷிகா ஆனந்த். தனது பள்ளி வயதிலேயே சினிமாவிற்கு வந்தவர். அவர் நடித்த முதல் படமான துருவங்கள் பதினாறு அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. ஆனாலும் சோர்ந்து போகாத யாஷிகா தொடர்ந்து தனது முயற்சிகளை வெளிப்படுத்தி கொண்டு தான் இருந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன் பிறகு அவருக்கு கிடைத்த வாய்ப்பு இருட்டு அறையில் முரட்டுக்கூத்து திரைப்படம். அவரது வயதில் யாரும் நடிக்க தயங்கும் படமாக இருந்தது. ஆனாலும் யாஷிகா துணிவுடன் அதில் நடித்திருந்தார். ஒரு பேட்டியில் கூட தன்னை பற்றி தனது பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு தெரியும் யார் என்ன பேசினாலும் கவலையில்லை என்று கூறியிருந்தார்.
இந்த சிறு வயதிலேயே அவரது பக்குவமும் திறமையும் அதிகமாக தான் இருந்தது. பிக் பாஸ் வீட்டில் அவர் கலந்துக்கொண்டு கலக்கி வந்தார். டாஸ்குகள் பலவற்றில் திறமையாக விளையாண்டு தனது முழு திறமையையும் வெளிப்படுத்தினார்.
குக் வித் கோமாளியில் வைல்ட் கார்டில் பிரபல சீரியல் நடிகை – உற்சாகத்தில் ரசிகர்கள்!!
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும்போது ரூ.5 லட்சம் ரொக்க பரிசும் பெற்று சென்றார் யாஷிகா. தற்போது அவருக்கு 21 வயது ஆன நிலையில் சினிமாவில் நிரந்தர இடத்தை பிடித்து விட வேண்டும் என பல முயற்சிகளை எடுத்து வருகிறார். படங்களில் குத்து பாட்டுக்கு நடனமாடுவது, கெஸ்ட் ரோலில் நடிப்பது போன்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
ஆனாலும் யாஷிகாவிற்கு நிரந்தர இடத்தை பிடிப்பது சற்று கடினமானதாகவே உள்ளது. இதனால் போட்டோஷூட்டை கையில் எடுத்துள்ளார். லாக்டவுன் சமயத்தில் இருந்தே பல புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சேலையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்த பலரும் கிறங்கி போய் தான் உள்ளனர்.