ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட காயத்தினால் இந்தியா வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அணியில் இருந்து விலகியுள்ளார். தற்போது அவருக்கு பதில் தமிழக வீரர் நடராஜன் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓர் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இந்தியா vs ஆஸ்திரேலியா:
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அணி ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் தொடர்களை பங்கேற்க சென்றுள்ளது. முதலில் ஆஸ்திரேலிய சுற்றுக்கு தேர்வான வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக விலகிய நிலையில் அவரது வாய்ப்பு தமிழக வீரர் நடராஜனுக்கு கிடைத்தது. அந்த வாய்ப்பை அவர் அருமையாக பயன்படுத்தி வருகிறார். ஆஸ்திரேலியா சுற்றின் மூலம் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர் தனது சர்வதேச அளவில் முதலாவது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். மேலும் அவர் விளையாடிய மூன்று டி20 போட்டிகளில் 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது டெஸ்ட் தொடர்கள் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் போட்டிக்கான இந்தியா அணியில் நடராஜன் இடம் பெறவில்லை. ஆனால் அவர் இந்தியா திரும்பாமல் அங்கேயே இருந்து, டெஸ்ட் போட்டிக்காக பயிற்சி மேற்கொள்ளும் இந்தியா அணி பேட்ஸ்மேன்களுக்கு தனது பௌலிங் மூலம் பயிற்சி அளித்து வருகிறார். மேலும் டெஸ்ட் போட்டியின் போது ஷமி காயம் காரணமாக விலகினார். இவருக்கு பதில் நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதில் அறிமுக வீரராக சிராஜ் களமிறக்கப்பட்டார்.
#INDvsAUS டெஸ்ட் போட்டி – கே.எல்.ராகுல் விலகல்!! ஆட்டம் காணும் இந்திய அணி!!
அதன்பிறகு 2 வது டெஸ்ட் போட்டியின் போது இந்தியா அணியின் வேகபந்துவீச்சாளர் உமேஷ் யாதேவிற்கு காயம் ஏற்பட்டதால் அவர் போட்டியின் நடுவே பெவிலியன் திரும்பினார். தற்போது 3 வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் சிட்னியில் துவங்குகிறது. இந்த போட்டியில் உமேஷ் யாதேவிற்கு பதில் நடராஜன் களமிறங்க போவதாக தகவல் வந்துள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். தற்போது நடராஜன் தனது டிவீட்டர் பக்கத்தில் ஓர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது,” வெள்ளை நிற ஜெர்சி அணிவது பெருமைக்குரிய தருணம், மேலும் அடுத்த சவால்களை எதிர்கொள்ள தயார்” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது அவர் வெள்ளை நிற ஜெஸ்ஸி அணிந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.