கடந்த சில நாட்களாகவே தங்கத்தில் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்றைய நிலவரப்படி மீண்டும் தங்கத்தில் விலை 38 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
தொடர்ச்சியாக உயரும் தங்கத்தின் விலை
தற்போது சில தினங்களாகவே தங்கத்தில் விலை ஏற்றமும் இறக்கமுமாகவே இருந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் சுமார் 43 ஆயிரத்தை தாண்டியது. அதன் பின் தங்கத்தில் விலை குறைந்தாலும் சில நாட்களாக விலை உயர்ந்து வருகிறது. மேலும் சென்னையில் இன்றைய நிலவரப்படி தங்கத்தில் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். மேலும் நகை விரும்பிகள் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் கவலையில் உள்ளார்கள்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது இன்றைய நிலவரப்படி ஆபரணதங்கத்தின் விலை சவுரனுக்கு ரூ.224 உயர்ந்து, ரூ.38,064ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.28 உயர்ந்து, ரூ.4,758ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2.20 உயர்ந்து, ரூ.73.40 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ. 73,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது.