டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் பங்கேற்றவர்களில் தமிழ் வழியில் தேர்வானவர்களின் சான்றிதழ்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், வழக்கிற்கான விசாரணையினை வரும் 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு:
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு துறைகளில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு போட்டி தேர்வுகளை நடத்தும். இந்த போட்டி தேர்வுகளில் பங்கேற்பவர்களில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீட்டினை தமிழக அரசு வழங்கிடும். ஆனால், இதற்கான சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக 8 மாதங்கள் வரை காத்திருப்பில் உள்ளது. இது குறித்து மதுரையை சேர்ந்த வக்கீல் ஒருவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்று தொடுத்திருந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “நான் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த குரூப் 1 தேர்வில் தேர்வுகளை எழுதினேன். அதில் நான் அதிக மதிப்பெண் பெற்றும் இருந்தேன். டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும், அதன் அடிப்படையில் நான் காத்திருந்தேன். ஆனால், என்னை இறுதி தேர்விற்கு அழைக்கவில்லை. இதற்கு எனக்கு நியாயம் வேண்டும். எனக்கு இட ஒதுக்கீடும் செய்யப்பட வேண்டும்” இவ்வாறாக அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
நீதிமன்ற உத்தரவு:
இந்த வழக்கினை நீதிபதி புகழேந்தி விசாரித்தார். அதில் அவர் 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரை தமிழ் வழியில் பயின்று 20 சதவீத இட ஒதுக்கீட்டிற்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை கேட்டிருந்தார். அரசு தரவில்லை இருந்து 85 பேர் இட ஒதுக்கீட்டினை கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பதில்மனு அளிக்கப்பட்டது. அதே போல் இந்த இட ஒதுக்கீட்டிற்கான சட்ட திருத்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக 8 மாத காலமாக உள்ளது என்றும் தெரிவித்திருந்தனர்.
சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள், அரிசி அட்டைக்கு மாற விண்ணப்பிக்கலாம்!!
தமிழக அரசின் மனுவினை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தற்போது இந்த 85 பேர் யார்? அவர்கள் பள்ளி முதல் கல்லூரி வரை தமிழ் வழியில் பயின்றவர்களா? என்பது போன்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். இது போன்ற முழு விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதே போல் இந்த வழக்கினை வரும் 9 ஆம் தேதி ஒத்தி வைத்தும் உள்ளனர்.