தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை வழங்கப்பட இருப்பதால் பலரும் சுற்றுலா பயணங்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு விமான நிறுவனங்கள் பயணக் கட்டணத்தை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விஸ்தாரா ஏர்லைன்ஸ் பல விமானங்களை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
TNPSC தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களா? இந்த புக் மெட்டீரியல் இருக்கா? உடனே முந்துங்கள்!!!
இதனால் முன்பதிவு செய்த பல பயணிகளும், மற்றொரு விமான நிறுவனத்தில் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் கோடை காலம் நெருங்குவதாலும், விமானங்களின் எண்ணிக்கை குறைவதாலும் பயணக் கட்டணம் அதிரடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.