IPL 2024 தொடர் நாளை ( மார்ச் 22) முதல் பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இந்த சீசனின் துவக்க ஆட்டத்தில் CSK மற்றும் RCB அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கிடையில் மும்பை இந்தியன்ஸ் அணியானது 5 முறை ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்கு வகித்த ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்துள்ளது. இதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தன.
சிலிண்டர் விலை ரூ.600 ஆக குறைப்பதில் இவ்வளவு சிக்கல் இருக்கிறதா?? சீமான் பகிரங்க கேள்வி!!
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா ஓய்வு குறித்து ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். நான் இவ்வளவு நாள் ஓய்வில் இருப்பதற்கு காரணம் ஐபிஎல்க்காக இல்லை. ஐபிஎல் அதில் ஒரு பகுதியாக இருக்கலாம். ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஒரு பெரிய குழந்தையான உலகக்கோப்பையை மீண்டும் சந்திக்க வேண்டியுள்ளது. நான் உலகக் கோப்பைகளை என் குழந்தைகளாக பார்க்கிறேன் என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.