தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடந்த சில நாட்களாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குடும்பத்தில் உள்ள அனைவரும் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர். அதன்படி இதுவரை 63 சதவீத குடும்ப அட்டைதாரர்களின் கைரேகை விவரங்கள் சரிபார்க்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கைரேகை பதிவு செய்யாத நபர்களின் பெயர் ரேஷன் அட்டையில் இருந்து நீக்கப்படும் என்றும், கார்டு ரத்து செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகி வந்தது.
Enewz Tamil WhatsApp Channel
தற்போது இதற்கு தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. இன்னும் கைரேகையை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்படாது. மேலும் ரேஷன் கார்டும் ரத்து செய்யப்பட மாட்டாது என தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் தங்களின் தேவைக்கேற்ப குடும்ப உறுப்பினர்கள் ரேஷன் கடைகளில் சென்று தங்களது கைரேகையை பதிவு செய்து கொள்ளலாம். எனவே இதை நினைத்து அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.