தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர் இன்னொரு பக்கம் தமிழக அரசு இந்த கோரிக்கையை ஏற்று சமீபத்தில் பல மதுக்கடைகளை முடியது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் சில மது பிரியர்கள் குடித்துவிட்டு பாட்டிலை பொது வெளியே போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இது போன்ற சூழ்நிலை உருவாக கூடாது என்பதற்காக தற்போது தேனி மாவட்ட டாஸ்மாக் கடைகள் சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதாவது தேனி மாவட்டத்தில் அதிக மதுபான கூடங்கள் உள்ளது. இங்கு மது வாங்குவோர் பாட்டில்களை வயல்வெளி, ஆறுகள், வாய்க்கால்கள் ஆகியவற்றில் போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது. எனவே இதை தடுக்க இனி வரும் நாட்களில் மது பாட்டில்களை கொண்டு வந்து கடைகளில் கொடுப்பவருக்கு பத்து ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.