மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய T20 தொடர் கடந்த டிசம்பர் 10ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இரு அணிகளும் சிறப்பாக விளையாடினாலும் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டதால், தொடர் சமனில் நிறைவடைய முக்கிய காரணமாக அமைந்தது. இந்த தொடரில் முக்கிய வீரராக பார்க்கப்படுவது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தான். இதில் சிறப்பாக செயல்பட்ட இவர் 2 போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 156 ரன்களை குவித்து அசத்தினார்.
இதன் மூலம் அவருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது. தற்போது இந்த பதிவில் அதிக முறை தொடர் நாயகன் விருதுகள் வென்ற TOP 5 இந்திய கேப்டன்கள் பற்றி காணலாம். இதில் ரன் மிஷின் விராட் கோலி (3 முறை) முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து 2-வது இடத்தை சூர்யகுமார் யாதவ் (1* முறை) பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ரோஹித் சர்மா (1 முறை ), ஹர்திக் பாண்டியா (1 முறை ) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்து உள்ளனர். இதில் ஜஸ்பிரித் பும்ரா (1 முறை ) 5-வது இடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
ரூ.6000 வெள்ள நிவாரணத்திற்கான விண்ணப்பம்., இந்த கேள்விகளுக்கு பதில் வேணும்? வெளியான முக்கிய தகவல்!!!