கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கொரோனா தொற்று:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் சித்தராமையா, மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் என பல முக்கிய தலைவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் எம்.பி.,க்கள் 4 பேர், எம்.எல்.ஏ.,க்கள் 28 பேர் என மொத்தம் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆன்லைன் வகுப்பிற்கு சிக்னல் இல்லை – மலை உச்சிக்கு ஏறிய மாணவர்கள்!!
சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம், நாகை எம்.பி செல்வராசு, மயிலாடுதுறை எம்.பி ராமலிங்கம் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், அரசு பணியாளர்கள், காவலர்கள் என பலரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி வசந்தகுமார் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் அவர்கள் இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
E pass is not necessary to ordinary people, it is very difficult to claim e pass so need not to ordinary people thanks