நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்ச்சி செய்ய “சந்திரயான் 3” விண்கலத்தின் விக்ரம் லேண்டர், கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. விண்கலத்தில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் ஆய்வு பணிகளை மேற்கொண்டு பல்வேறு தகவல்களை வழங்கியது. பின்னர் நிலவில் சூரிய ஒளி மறைய தொடங்கியதால், ரோவரை மீண்டும் விக்ரம் லேண்டருக்குள் அனுப்பி உறக்க நிலையில் வைக்கப்பட்டது.
Enewz Tamil WhatsApp Channel
இதைத்தொடர்ந்து இன்று (செப்டம்பர் 22) சூரிய உதயம் நிலவில் வர உள்ளதால், சோலார் பேனல் மூலம் சார்ஜ் ஆகி செயல்பாட்டுக்கு வரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான பணிகள் இன்று நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மகளிர் உரிமை தொகை பெற அடுத்த கட்ட நடவடிக்கை…, தமிழக அரசு செய்த ஏற்பாடு!!